ஆப்நகரம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

உத்ரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் பலகட்டங்களாக நடத்தப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது. இவற்றில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன.

TOI Contributor 9 Mar 2017, 7:19 pm
உத்ரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் பலகட்டங்களாக நடத்தப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது. இவற்றில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன.
Samayam Tamil 5 state election exit polls released
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு


நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் பா.ஜ.கவுக்கு கைகொடுக்குமா அல்லது ஒரு சறுக்கலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் நோக்கர்கள் தங்கள் கணிப்பை இப்போதே சொல்ல தொடங்கிவிட்டனர். அதன்படி உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.கவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 18 இடங்களும், காங்கிரஸ் 15 இடங்களும், ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள் மற்ற கட்சிகள் 5 இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 32 இடங்களை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகள் 6 இடங்களை பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 28 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 20 இடங்களிலும், மற்ற கட்சிகள் 12 இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி 63 இடங்களை பெற்று பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிஸ் 45 இடங்களும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிரோன்மணி அகலிதளம் கட்சி 9 இடங்களை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி