ஆப்நகரம்

கேரளாவில் அதிர்ச்சி; காணாமல் போன 50 பேர், ஆஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலா...?

கொச்சி: செராய் கடற்கரையில் இருந்து 50 பேர் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

TIMESOFINDIA.COM 15 Jan 2019, 4:06 pm
டெல்லியில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர், கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் கடந்த 12ஆம் தேதி, புகழ்பெற்ற கடற்கரை பகுதியான செராயில் தங்கியுள்ளனர்.
Samayam Tamil Human Trafficking


இவர்கள் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முனம்பம் துறைமுகப் பகுதியில் இருந்து, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிற்கு மிகப்பெரிய மோட்டார் படகில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீவு கேரளா கடற்கரையில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரபல புலனாய்வு அமைப்புகள் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, இது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு.

இதனை கடத்தலில் கைதேர்ந்த சர்வதேச கும்பல் ஒன்று செய்துள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த இருவர் ‘தேவமாதா’ என்ற படகை ரூ.1.02 கோடி ரொக்கப் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.

மேலும் ரூ.10 லட்சம் கொடுத்து 12,000 லி டீசல் வாங்கியிருக்கின்றனர். இந்தக் குழுவினர் 1000 லி பிடிக்கக்கூடிய 5 வாட்டர் டேங்குகள், ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர்.

இதன்மூலம் கடலில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய தயாராகி இருந்தது தெரிகிறது. இருப்பினும் இது ஆட்கடத்தலா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எர்ணாகுளம் எஸ்பி எஸ்.பி.நாயர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி