ஆப்நகரம்

கர்நாடகாவில் 50 தமிழக சொகுசு பேருந்துகள் தீ வைத்து எரிப்பு

பெங்களூரு துவாரக நகர் பகுதியில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 50 தமிழக சொகுசு பேருந்துகளை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.

TOI Contributor 12 Sep 2016, 7:34 pm
பெங்களூரு துவாரக நகர் பகுதியில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 50 தமிழக சொகுசு பேருந்துகளை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
Samayam Tamil 50 tn registered travel buses burnt in karnataka
கர்நாடகாவில் 50 தமிழக சொகுசு பேருந்துகள் தீ வைத்து எரிப்பு


கர்நாடகாவில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில், தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டும், தீ வைத்து எரிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை பெங்களூருவின் புறநகரான துவாரக நகர்ப் பகுதியில் நைஸ் சாலையில் உள்ள தனியார் பேருந்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக சொகுசு பேருந்துகளுக்கு, வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதில், கேபிஎன், எஸ்ஆர்எஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான 50 பேருந்துகள், தீ பற்றி எரிந்துள்ளன. உச்சநீதிமன்றம் வன்முறைச் சம்பவங்களை நிறுத்தும்படி, கர்நாடகாவை கண்டித்துள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி