ஆப்நகரம்

''ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது''- மன்மோகன் சிங்

''ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தவறான முறையில் கையாளப்பட்டு, தோல்வி அடைந்துள்ளது'' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

TOI Contributor 24 Nov 2016, 6:12 pm
''ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தவறான முறையில் கையாளப்பட்டு, தோல்வி அடைந்துள்ளது'' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
Samayam Tamil 500 and 1000 rupee notes was labelled a monumental management failure by his predecessor dr manmohan singh
''ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது''- மன்மோகன் சிங்


மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தததால் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து இன்று மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவையில், பிரதமர் மோடி அமர்ந்து இருந்தார்.

மன்மோகன்சிங் பேசுகையில், ''50 நாட்கள் பொறுத்து இருங்கள் என்று பிரதமர் கூறுகிறார். இந்த குறுகிய நாட்கள் ஏழைகளை அதிகளவில் பாதிக்கும். தவறான முறையில் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை கையாளப்பட்டு, தோல்வி அடைந்துள்ளது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் நமது ரூபாய் மற்றும் வங்கியின் மீது இருக்கும் நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள். தொடர்ந்து மத்திய தனது கொளகைகளை மாற்றி வருகிறது. ஏடிஎம்மில் எடுக்கும் பணத்தின் அளவை தொடர்ந்து மாற்றினால் மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள். ​ இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இது திட்டமிட்ட கொள்ளை. திட்டங்கள் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது.

எந்த நாட்டிலாவது தங்களுடைய பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவித்ததை பிரதமர் சுட்டிக் காட்ட முடியுமா?ரூபாய் நோட்டு தடையால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் எடுப்பார் என்று நம்புகிறேன்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நல்லது என்று கூறுபவர்கள் அந்த வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீடித்தால், நாம் அனைவரும் இறந்துவிடுவோம்'' என்றார்.'' என்றார்.

அடுத்த செய்தி