ஆப்நகரம்

பண பரிவர்த்தனைக்கு 59 ரூபாய் பிடித்த வங்கியை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரி!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, பணம் பரிவர்த்தனையின்போது, வங்கி பிடித்த ரூ.59-ஐ திரும்ப தருமாறு முறையிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2019, 1:33 pm
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, பணம் பரிவர்த்தனையின்போது, வங்கி பிடித்த ரூ.59-ஐ திரும்ப தருமாறு முறையிட்டுள்ளார்.
Samayam Tamil 67634052


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, அரசு வங்கி ஒன்றில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அவருக்கு மாதம் சம்பளம் வரும் நாளில் 59 ரூபாய், வங்கியின் சார்பில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்றுள்ளது.

இதனால் கோவமடைந்த காவல்துறை அதிகாரி வங்கியை தொடர்பு கொண்டு, தனது வங்கி கணக்கில் இருந்து பிடித்த ரூ.59-ஐ திரும்ப செலுத்துமாறு கூறியுள்ளார். அதேபோல் அம்மாநிலத்தில் உள்ள 50,000 காவல்துறை அதிகாரிகளின் கணக்குகளிலிருந்து, இதேபோல் பணம் பிடிக்கப்பட்டதா? என்று விசாரணை நடத்துமாறு தலைமை காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏஐஜி சார்பாக, எல்லா காவல் நிலையத்திற்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது’ ரூ.59 ரூபாய்க்காக யாராவது வங்கிக்கு சென்று வாதிடுவார்களா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் 50,000 வங்கி கணக்கில் இருந்ந்து ரூ.59பிடிக்கப்பட்டால் பல கோடி ரூபாய் சேரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி