ஆப்நகரம்

இந்தியாவில் 54 ஐஎஸ் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: மத்திய அமைச்சர்

புது டெல்லி: இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 54 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 12 Aug 2016, 3:27 am
புது டெல்லி: இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 54 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 54 isis supporters arrested govt
இந்தியாவில் 54 ஐஎஸ் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: மத்திய அமைச்சர்


மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பற்றி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்தார் . அவர் அளித்த பதிலில் தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல்துறைகளும் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே, 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மத்திய இணை அமைச்சர் மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி