ஆப்நகரம்

கேரளாவில் கனமழையால் பெருவெள்ளம்; வீடுகளை இழந்து தவிக்கும் 54,000 பேர்!

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 54,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

Samayam Tamil 11 Aug 2018, 3:19 pm
திருவனந்தபுரம்: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 54,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
Samayam Tamil Kerala Floods


கேரளாவில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

54,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் 400க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால், மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 40க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வெள்ள பாதிப்புகள் முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் நேரில் ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சமும், விளைநிலங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

54,000 people lost their home due to Kerala rains.

அடுத்த செய்தி