ஆப்நகரம்

மகராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 55 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஆக்கிஜன் பற்றாக்குறையால் 55 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Sep 2017, 8:53 pm
உத்தரபிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஆக்கிஜன் பற்றாக்குறையால் 55 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 55 children were died in nashik government hospital
மகராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 55 குழந்தைகள் உயிரிழப்பு


உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் வசதி இல்லாததால், கடந்த மாதம் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வடு ஆறுவதற்குள்ளேயே மீண்டும் பரூக்காபாத்திலுள்ள அரசு மருத்துவமனையிலும் 5 நாட்களில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிழந்தனர். இதில் அடுத்தபடியாக, நாசிக் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்கிஜன் பற்றாக்குறையால் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி டாக்டர் சுரேஷ் ஜகதாலே கூறுகையில், இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இக்கட்டான நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள். குறைபிரசவம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்று கூறினார்.

நாசிக் அரசு மருத்துவமனையில் 18 இன்குபேட்டர்கள் உள்ளன. இதிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு இன்குபேட்டரில் 2,3 குழந்தைகளைக்கூட வைக்க வேண்டிய நிலை உள்ளது” என சுரேஷ் ஜகதாலே கூறினார்.
மேலும், இதுகுறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த், குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் தான் காப்பாற்ற இயலாமல் போய்விடுகிறது என தெரிவித்தார்.
55 Children were died in nashik government hospital.

அடுத்த செய்தி