ஆப்நகரம்

ரயில்வே பிளாட்பார்ம் இடைவெளியில் விழுந்த பெண் மரணம்

குஜராத் மாநிலத்தில், ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையே தவறிவிழுந்த பெண், பலத்த காயமுற்று, உயிரிழந்தார்.

TNN 12 Aug 2016, 4:46 pm
குஜராத் மாநிலத்தில், ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையே தவறிவிழுந்த பெண், பலத்த காயமுற்று, உயிரிழந்தார்.
Samayam Tamil 55 yr old woman falls into platform gap dies
ரயில்வே பிளாட்பார்ம் இடைவெளியில் விழுந்த பெண் மரணம்


வஸ்தி மங்கால் (55) என்ற பெண்மணி, ஆமதாபாத்தில் இருந்து மகுடி என்ற பகுதிக்கு, மின்சார ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளார். வழியில், தாகூத் ரயில்நிலையத்தில் இறங்கி, மற்றொரு ரயில் மாறிய அவர், நிலைதடுமாறி, பிளாட்பார்ம் மற்றும் ரயிலுக்கும் இடையிலான சிறிய பகுதியில் விழுந்தார். ரயில் நகர தொடங்கியதால், அவர் உடல் நசுங்கி, பலத்த காயம் அடைந்தார். இதன்பின், அவரது அலறல் சத்தம் கேட்டு, ரயிலை நிறுத்தி, வஸ்தி மங்காலை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெரும் போராட்டத்திற்குப் பின், மீட்கப்பட்ட அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி