ஆப்நகரம்

உ.பி. தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 6 போ் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் தனியாா் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் பணியாளா்கள் 6 போ் உயிாிழந்தனா்.

Samayam Tamil 12 Sep 2018, 4:06 pm
உத்தர பிரதேச மாநிலத்தில் தனியாா் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் பணியாளா்கள் 6 போ் உயிாிழந்தனா்.
Samayam Tamil Uttar Pradesh Blast


உத்தரபிரதேசம் மாநிலம் நாகினா சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் உள்ள கொதிகலன் கடந்த சில தினங்களாக பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இனறு காலை அந்த கொதிகலனை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கொதிகலனில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளா்கள் 6 போ் பரிதாபமாக உயிாிழந்ததாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் 2 போ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் அவா்கள் தொிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துயைினா் ஆலையின் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

அடுத்த செய்தி