ஆப்நகரம்

தோல்வியில் முடிந்த மீட்புப்பணி: 400 அடி ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த 6 வயது சிறுமி

400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

TNN 25 Apr 2017, 6:21 pm
பெங்களூரு: 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
Samayam Tamil 6 year old girl dead who fell in borewell in karnataka
தோல்வியில் முடிந்த மீட்புப்பணி: 400 அடி ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த 6 வயது சிறுமி


கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஜஞ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர ஹிப்பரகி. அவருடைய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டி, தண்ணீர் இல்லாததால் மூடாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சவிதா என்பவரின் மகள் காவேரி(6), ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். இதையடுத்து எதிர்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை தொடங்கினர். சிறுமிக்கு மூச்சுத்திணறாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் வாயு உள்ளே தொடர்ந்து செலுத்தப்பட்டது.

கண்காணிப்பு கேமரா ஒன்றும் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கிடையில் 4 முறை சிறுமியை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் 56 மணி நேரத்திற்குப் பின் சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 year old girl dead who fell in borewell in Karnataka.

அடுத்த செய்தி