ஆப்நகரம்

சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 6.3 கோடி பொதுஜனம் - உலக தண்ணீர் தினத்தில் ஒரு எச்சரிக்கை

இன்று உலக தண்ணீர் தினம். குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

TOI Contributor 22 Mar 2017, 5:55 pm
இன்று உலக தண்ணீர் தினம். குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
Samayam Tamil 63m in india do not have access to clean water
சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 6.3 கோடி பொதுஜனம் - உலக தண்ணீர் தினத்தில் ஒரு எச்சரிக்கை



3 பங்கு தண்ணீரும், ஒரு பங்கு நிலப்பரப்பும் கொண்டு உலகில் நாம் வசித்து வருகிறோம். தண்ணீருக்கு பஞ்சமில்லை தான். ஆனால் குடிநீர் நாளுக்குநாள் கேள்விக்குறியாகி வருகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமையமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சம்.

கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு அறிக்கை கூறுகிறது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

அடுத்த செய்தி