ஆப்நகரம்

பெண்களை ஈர்க்க கார் திருடியவர் கைது

பிரிந்து சென்ற காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கார் திருடி மற்ற பெண்களை கவர முயன்ற 65 வயது மதிக்கத்தக்க நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

TNN 20 Apr 2017, 10:38 am
புதுடெல்லி: பிரிந்து சென்ற காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கார் திருடி மற்ற பெண்களை கவர முயன்ற 65 வயது மதிக்கத்தக்க நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil 65 year old who stole cars to woo women arrested
பெண்களை ஈர்க்க கார் திருடியவர் கைது


பலம்திவிஹார் பகுதியில் 9கடந்த ஆண்டுகளாக வசித்து வரும் ராஜ் பாட்டியா(65), திருமணமாகாதவர். ராஜ் விரும்பிய பெண்ணுக்கு ஹூண்டாய் கிரட்டா கார் மீது ஆர்வம் இருந்ததால், அந்த வகை கார்கள் வைத்திருப்பவர்களை பின்தொடர்ந்து அவர்களின் இருப்பிடத்தை தெரிந்துக் கொண்டு பின்னர் கார்களை திருடியுள்ளார்.

திருடிய கார்களை வைத்து பந்தா காட்டி மற்ற பெண்களையும் கவர முயன்ற ராஜ் மீது ஏற்கனவே டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கார் திருட்டு வழக்கு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரை பறிக்கொடுத்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து இவ்வழக்கினை காவல்துறையினர் விசாரித்தனர். அதில், பலம்விஹார் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் திருடிய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். பின்னர் அப்பகுதியில் பதுவங்கியிருந்து ராஜை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜின் நண்பர்கள் எலெக்ட்ரானிக் சாவிகளை வடிவமைத்து தருவார்கள், அதை வைத்து கார்களை திருடுவதாக அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜின் நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த வாரம் இவர்கள் மற்றொரு கிரட்டா காரை திருட திட்டமிட்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. திருடிய கார்களில் பெண்களை ஏற்றிக் கொண்டு இன்ப பயணம் சென்றுவிட்டு பின்னர் காரை விற்றுவிடுவதாகவும் ராஜ் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Before his lover left him for another man, she had told him about her fascination for Hyundai Creta. This 65-year-old thief then decided to start stealing this car to woo other women. He would follow the cars along with his accomplices, identify their location and steal them later.

அடுத்த செய்தி