ஆப்நகரம்

14 மாதத்தில் 8 முறை அம்மாவான மூதாட்டி? - அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

பிகாரில் மூதாட்டி ஒருவர் 14 மாத இடைவெளியில் எட்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாக கூறி, அவருக்கு அரசின் ஊக்கத்தொகை முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 7:53 pm
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்துக்குட்ட முசாஹரி பகுதியைச் சேர்ந்தவர் லீலா தேவி. 65 வயதான இவர் கடந்த 14 மாதங்கள் இடைவெளியில் மொத்தம் 8 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக அரசு மருத்துவமனையின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Samayam Tamil bihar scam


இதேபோன்று, சோனியா தேவி என்ற மூதாட்டி கடந்த ஒன்பது மாதத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்தாகவும் மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டிகள் எப்படி கர்ப்பமடைய முடியும், அதுவும் சில மாதங்கள் இடைவெளியில் எப்படி இவ்வளவு பெண் குழந்தைகளை பெற்றிருக்க முடியும் என்று மருத்துவ துறை உயரதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

ஒரேவொரு எலி, ரூ.1 கோடி நாசம் - நிஜத்தில் அரங்கேறிய ’மான்ஸ்டர்’ சம்பவம்!

இதையடுத்து, இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் முறைகேடு செய்யும் நோக்கில் மருத்துவமனை அதிகாரிகள், மூதாட்டிகள் பெண் குழந்தை பெற்றதாக ஆவணத்தில் போலியாக குறிப்பிட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், லீலா தேவிக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பதும், அவர்தான் அவரது வீட்டின் கடைக்குட்டி என்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தீராத பசி, பதறவைத்த சிறுமியின் மரணம்; லேட்டா விழித்துக் கொண்ட அரசு!

"இந்த முறைகேடு குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் , தவறிழைத்த அதிகாரிகள் மீது சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் 1,400 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி