ஆப்நகரம்

7 பேர் விடுதலை விவகாரம்: காங்., ஒத்திவைப்பு தீர்மானம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேட்டீஸ் அளித்துள்ளது.

TNN 3 Mar 2016, 10:43 am
புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேட்டீஸ் அளித்துள்ளது.
Samayam Tamil 7 members release issue congress adjournd notice in loksabha
7 பேர் விடுதலை விவகாரம்: காங்., ஒத்திவைப்பு தீர்மானம்


ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இவ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளது.

அடுத்த செய்தி