ஆப்நகரம்

ஈசியாக சிகரம் தொட்ட சின்னப் பையன் சமன்யு

ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஏறி சாதனை படைத்துள்ளான்.

Samayam Tamil 16 Apr 2018, 8:52 pm
ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஏறி சாதனை படைத்துள்ளான்.
Samayam Tamil Kilimanjaroapr16


ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து மலையேற்றக் குழுவினர் வருகின்றனர்.

அண்மையில் ஹைதராபாத் நகரத்திலிருந்து ஒரு குழு கிளிமஞ்சாரோவில் மலையேற்றத்துக்குச் சென்றது. அந்தக் குழுவினருடன் 7 வயது சிறுவன் சமன்யு போத்துராஜூவும் மலையேறி சாதனை படைத்துள்ளான்.

தன் அம்மா மற்றும் பயிற்சியாளருடன் மலையேறியுள்ளான் சமன்யு. அவனது அம்மாவுக்கு உடல்நிலக்குறைவு ஏறப்ட்டு பாதியிலேயே திரும்பியபோதும் சமன்யு குழுவினருடன் தொடர்ந்து மலையேறி, ஏப்ரல் 2ஆம் தேதி உகுரு என்று அழைக்கப்படும் கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்துள்ளான்.

‘பனிப்பொழிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், கிளிமஞ்சாரோவுக்குச் போனேன். அங்கே மலையேறிபோது கால் வலித்தது. அதனால் கொஞ்சம் பயந்தேன். அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டதால் வெற்றிகரமாக சிகரத்தைத் தொட்டுவிட்டேன்’ என்று சிறுவன் சமன்யு கூறியுள்ளான்.

மேலும், ‘எனக்குப் பிடித்த நடிகர் பவன் கல்யாணை சந்திக்க ஆசை. மலையேற்றத்திற்குப் பின் அவரைச் சந்திக்க அழைத்து செல்வதாக அம்மா சொன்னார். அவரைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் மலையேறப் போகிறேன்.’ என்றும் உற்சாகமாகக் கூறுகிறான் சமன்யு.

அடுத்த செய்தி