ஆப்நகரம்

தில்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தில்லியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சிறார் பாலியல் கொடுமைகள் நடப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 9:48 am
தில்லியின் ஷகாபூரில் வசிப்பவர் மனீஷ்(30). இப்பகுதியில் வசிக்கும் ஏழு வயது சிறுமி ஒருவர் வீதியில் கடைக்குச் சென்று பொருள் வாங்கித் திரும்பியுள்ளார். அவருக்கு ஏதோ சாப்பிடத் தருவதாகக் கூறி, மாடிக்கு அழைத்துச் சென்ற மனீஷ் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். சிறுமி தன்னால் இயற்றவரை கூச்சலிட்டு உதவி கேட்க முயன்றார். மனீஷ் சிறுமியின் வாயையும் மூக்கையும் துணியால் பொத்தி கொல்ல முயன்றார்.
Samayam Tamil sexual harrasment


அப்போது எப்படியோ தப்பித்த சிறுமி மாடியின் மற்றொரு மூலைக்கு ஓடினார். அங்கு அவர் பக்கத்து வீட்டு மாடியில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். சிறுமியின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து மனீஷை பிடித்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது. 7 வயது சிறுமிக்கு பாதுகாப்பில்லாத இடமாக தில்லி மாறிவிட்டது என பலர் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தில்லியில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக சிறார் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மறுபுறம் காவல்துறையும் மாநில அரசும் சீறிய முயற்சி மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி