ஆப்நகரம்

முன்மாதிரித் திருமணம்: 700 பேர் உடல் உறுப்பு தானம்

மகாராஷ்டிராவில் நடந்த திருமணத்தில் மணமக்கள் உட்பட 700 பேர் உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Mar 2018, 6:03 am
மகாராஷ்டிராவில் நடந்த திருமணத்தில் மணமக்கள் உட்பட 700 பேர் உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil முன்மாதிரித் திருமணம்: 700 பேர் உடல் உறுப்பு தானம்


மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள நாஷிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் வர்ஷா பாகர் மற்றும் ஸ்வப்நில் கொதவாடே. இருவருமே காவல்துறையில் துணை கமிஷனராக உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவர்களது திருமணத்தை முன்னிட்டு இருவரும் உடலுறுப்பு தானம் செய்தனர். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஆர்வமுடன் உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்துகொண்டனர்.



மொத்தம் 700 பேர் வரை உடலுறுப்பு தானம் செய்திருக்கின்றனர். இத்துடன் திருமண விழாவில் ரத்த தானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 60 பேர் ரத்த தானம் அளித்தனர்.

இருவருக்குமே சமூக சேவையில் ஈடுபாடு உண்டு என்றும் தங்கள் திருமண நாளை அதற்கான நாளாக பயன்படுத்திக்கொள்ள விரும்பியதாவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் இந்த மணமக்கள்.

அடுத்த செய்தி