ஆப்நகரம்

பிகார்: இடி விழுந்து 83 பேர் பலி... கவலை தெரிவித்த மோடி

பிகாரில் இடி விழுந்து இதுவரை 83 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 25 Jun 2020, 8:26 pm
பிகாரில் இடி விழுந்து 83 பேர் இன்று பலியாகியிருப்பதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil lightning


இதில் அதிகபட்சமாக கோபால்கன்ஜ் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், பலியான 83 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.



மேலும், இந்த செய்தி தன்னை வெகுவாகக் கவலைப்படுத்தியதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி