ஆப்நகரம்

68 நாடுகளில் சிறையில் 8445 இந்தியர்கள் : இந்திய வெளியுறவு துறை

மொத்தம் 20 அமர்வுகள் கொண்ட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி, 2019 ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Samayam Tamil 20 Dec 2018, 4:14 pm
மொத்தம் 20 அமர்வுகள் கொண்ட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி, 2019 ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
Samayam Tamil VK Singh


இந்தத் தொடரில் 23 மசோதாக்கள், பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அதேவேளையில், புதிதாக 20 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 2 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட உள்ளன.

ஆனால் இந்த கூட்டத்தொடர் மேகதாது அணை பிரச்னை, ரஃபேல் விமானம் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களால் பெரும்பாலும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றது.

இன்று நடந்த கூட்டத்தில் மேகாது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை நண்பகல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போது அமளி தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

8445 கைதிகள் :
இந்த தொடரில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விகே சிங் பேசுகையில், “68 நாடுகளில் 8445 இந்தியர்கள் சிறையில் உள்ளனர் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி