ஆப்நகரம்

டெல்லியில் 90 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

டெல்லியில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 90 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 8 Feb 2019, 12:07 pm
டெல்லியில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 90 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil bth890vo_swine-flu_625x300_12_October_18


H1N1 வைரஸ் எனப்படும் பன்றிக் காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முக்கியத் தகவல் ஒன்றை அன்மையில் வெளியிட்டிருந்தது. அதில் , நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் இரண்டாயிரம் பேருக்கு மேல் பாதிகப்பட்டுள்ளதாகவும் இதில் 226 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில்90 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த 90 பேரையும் சேர்த்து 1,196பேர் பன்றிக்காய்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக டெல்லி அரசின் சுகாதரத்துறை அமைச்சர் சத்தியந்தர் ஜெயின் , பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இதில் டெல்லியில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் கூறியதாவது’ திடீரென்று பன்றிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது.இதற்கு எந்த காரணம் என்பது தொடர்பாகஆய்வு செய்து வருகிறோம். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுள்ளது.

மேலும் யாருக்காவது தீவிர காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்’’ என்று கூறினார்.

அடுத்த செய்தி