ஆப்நகரம்

அதுக்குனு எல்லா நாளுமா? எங்கே அந்த 95 எம்.பிக்கள்?- ஷாக்கான வெங்கையா நாயுடு!

நாடாளுமன்ற கமிட்டியின் அனைத்து கூட்டங்களுக்கும் வருகை புரியாத எம்.பிக்கள் பற்றி ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு தகவல் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 2 Mar 2020, 5:20 pm
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடியது. இந்நிலையில் ராஜ்ய சபாவில் பேசிய அதன் தலைவர் வெங்கையா நாயுடு, மொத்தமுள்ள 244 எம்.பிக்களில் 95 பேர்(39 சதவீதம்) நாடாளுமன்ற நிலைக்குழுவின் எந்தவொரு கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. கடந்த கூட்டத்தொடரில் 28 பேர் மட்டுமே பூஜ்ய வருகையை கொண்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil Rajya Sabha


கடந்த 1993ஆம் ஆண்டு துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக்குழு உருவாக்கப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பர். இதன்மூலம் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதற்கு பல்வேறு விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்படும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பங்கேற்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கூட்டங்களை தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 100ஆக இருந்தது. அது நடப்பாண்டில் 106ஆக உயர்ந்துள்ளது.

இதில் 28 பேர் ராஜ்ய சபாவை சேர்ந்தவர்கள். 78 பேர் லோக் சபாவை சேர்ந்தவர்கள். இந்த தகவலை வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

''எனக்குத் தெரியும் எப்ப செய்யணும்ன்னு'': பொங்கிய அமித் ஷா!!

அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் அனைவரும் தங்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும். 8 குழுக்களில் 4ல் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமான வருகை இடம்பெற்றுள்ளது.

இதுவொரு நல்ல விஷயம். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குழு கூட்டத்தில் தான் அதிகபட்சமாக 65.51 சதவீத வருகை பதிவாகியுள்ளது. இந்தக் குழுவை சேர்ந்த 29 பேரில் 19 பேர் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளனர். வர்த்தகத்துறை சார்ந்த கூட்டத்தில் தான் மிகக் குறைவாக 32.25 சதவீத வருகை பதிவாகி இருக்கிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி