ஆப்நகரம்

ரூ.250 கிரிக்கெட் பெட்டிங்கில் பரிதாபமாக பலியான 12வயது சிறுவன்!

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ரூ.250 கிரிக்கெட் பெட்டிங் பணத்தை கேட்ட 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 24 Apr 2017, 10:37 am
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ரூ.250 கிரிக்கெட் பெட்டிங் பணத்தை கேட்ட 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a 12 year old won a 250 rupee cricket bet but lost his life
ரூ.250 கிரிக்கெட் பெட்டிங்கில் பரிதாபமாக பலியான 12வயது சிறுவன்!



கொல்கத்தாவின் ஹாவுராவில், கிரிக்கெட் முடிவு குறித்து ரூ. 250 பெட்டிங் கட்டி இரண்டு சிறுவர்கள் விளையாடியுள்ளனர். அதில் வெற்றி பெற்ற சிறுவனுக்கும், பணம் தர மறுத்த மற்றொரு சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், வெற்றி பெற்ற சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
அந்த சிறுவனின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், “என் மகன் வெற்றி பெற்ற பணத்தை தர அவன் மறுத்துவிட்டான். என்னுடைய மகனை அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவனை கடுமையாக செங்கலை வைத்து தாக்கியதோடு, கொடூரமாக அடித்துள்ளான். இதில் என் மகன் சுயநினைவை இழந்துவிட்டான்.தொடர்ந்து எனமகனின் மூச்சை அவன் நிறுத்திவிட்டான். என் மகன் எனக்கு திரும்ப கிடைக்கபோவது இல்லை. ஆனால் குற்றவாளி நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். ” என்றார்.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், அவனது நண்பர்களை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A 12-year-old boy in West Bengal's Howrah district allegedly killed his friend following a dispute over a bet of Rs. 250 placed on a cricket match, police said on Sunday.

அடுத்த செய்தி