ஆப்நகரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு; சாக்லேட் விநாயகர் செய்த பேக்கரி உரிமையாளர்!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர், சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து, அதை சிறுவர்களுக்கு உணவாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

TNN 7 Sep 2016, 2:06 pm
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர், சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து, அதை சிறுவர்களுக்கு உணவாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil a bakery owner in ludhiana made a chocolate ganapati
சுற்றுச்சூழல் பாதுகாப்பு; சாக்லேட் விநாயகர் செய்த பேக்கரி உரிமையாளர்!


பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றால், பழங்கள், உணவுப் பொருட்கள், ரசாயன மற்றும் உலோகப் பொருட்கள் என பலவற்றை பயன்படுத்தி, சிறியது முதல் பிரமாண்டமான சிலைகள் வரை செய்வது வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக, பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர், சாக்லேட்டை பயன்படுத்தி, விநாயகர் சிலை ஒன்றை செய்துள்ளார்.

எல்லாரும் பூஜை முடிந்ததும், விநாயகர் சிலையை ஆறு, குளம், ஏரி, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்துவிடுவார்கள். ஆனால், இவரோ சற்று வித்தியாசமாக, பாலில் அந்த சிலையை கரைத்து, சாக்லேட் மில்க் ஆக மாற்றி, ஏழை குழந்தைகளுக்குக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படிச் செய்வதால், நீர்நிலைகள் மாசுபடுவதை தடுப்பதோடு, சாமி கும்பிடுவதன் உண்மையான பயனும் கிடைக்கும் என்று கூறும் அவர், இந்த செய்முறையை பலரும் பின்பற்றவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி