ஆப்நகரம்

திடீர் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கர்நாடகா பேருந்து

வடக்கு கர்நாடகாவில் இன்று காலை பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடகாவின் அரசு பேருந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.

TOI Contributor 15 May 2017, 11:56 am
கடாக் : வடக்கு கர்நாடகாவில் இன்று காலை பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடகாவின் அரசு பேருந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
Samayam Tamil a bus that broke into the flood in north karnataka
திடீர் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கர்நாடகா பேருந்து


கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள கடாக் மாவட்டத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் லக்‌ஷ்மேஸ்வரிலிருந்து டொட்டூரு நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கி கவிழ ஆரம்பித்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், மீட்பு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தகவல் அளித்ததோடு, பணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பேருந்தின் அவசரகால வாசல் வழியாக பயணிகள் வெளியேறியதோடு, பேருந்தை ஒரு மரத்துடன் ஒரு கனமான கயிறால் கட்டி பயணிகளை மீட்டனர்.



மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் சிறு மழை பெய்வது மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றது.

அடுத்த செய்தி