ஆப்நகரம்

’நான் டெரரிஸ்டெல்லாம் இல்ல...வெறும் பில்டப்தான் தான்!

மகாராஷ்ட்ராவில் வைஃபைக்கு தீவிரவாத இயக்கத்தின் பெயர் வைத்து சிக்கியுள்ளார் ஓர் இளைஞர். அவருக்கு போலீஸார் புத்திமதி கூறினர்.

Samayam Tamil 18 Feb 2019, 12:05 pm
மஹாராஷ்ட்ராவின் தானேவில் உள்ளது கல்யாண் நகரம். இங்கு அம்ருத் ஹெவன் காம்பிளக்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் ஒர் குறுப்புக்கார இளைஞர், தன் பிராட்பேண்ட் வைப்ஃபைக்கு ’லஷ்கர்-இ-தாலிபான்’ என விளையாட்டாக பெயர் வைத்துள்ளார்.
Samayam Tamil terrorist


அதே குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு இளைஞரின் ஸ்மார்ட்போனில் பயங்கரவாத அமைப்பின் பெயரில் ஒய்ஃபை செயல்படுவதைக் காட்டியது. இதனால் பயந்துபோன அவர் இந்த விஷயத்தை தன் ஃபிளாட் மக்களின் வாட்சாப் குரூப்பில் கூறினார். இதனால் துணுக்குற்ற அவர்கள் இச்சம்பவத்தை போலீஸாரிடம் தெரிவித்தனர்.

ஒருவேளை லஷ்கர் பயங்கரவாதிகள்தான் அங்கு தங்கி தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றனரோ என நினைத்து போலீஸார் துப்பாக்கியுடன் தயாராக அங்கு வந்து இளைஞரின் போர்ஷனை சுற்றி வளைத்தனர். ஏதே சர்வதேச பயங்கரவாதியை பிடிப்பதுபோல தன் வீட்டை சுற்றிவளைத்திருக்கும் போலீஸாரைக் கண்டு இளைஞர் நடுநடுங்கிப் போனார். பின்னர் அந்த இளைஞர் ஓர் டம்மி பீஸ் எனத் தெரிந்து போலீஸார் அவருக்கு எச்சரிக்கை அளித்து வைஃப்பை பெயரை ஒழுங்காக மாற்றக் கூறினர். இளைஞரும் மாற்றினார். இச்சம்பவம் அங்கு வேடிக்கைக்குள்ளாகி உள்ளது.

அடுத்த செய்தி