ஆப்நகரம்

கேரள நிலச்சரிவு: சிறுமியின் சடலத்தை மீட்க உதவிய வளர்ப்பு நாய்!

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வளர்ப்பு நாய் செய்த உதவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Samayam Tamil 15 Aug 2020, 6:14 pm
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி குடியிருப்பு பகுதியில் கடந்த 7 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் மண்ணில் சிக்கினர். 8 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 56 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Samayam Tamil idukki landslide


மேலும், 14 பேர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளியின் வீட்டில் வளர்ந்த நாயின் மூலமாக 2 வயது சிறுமியின் உடல் மீட்டக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுளளது. தனுஷ்கா என்ற 2 வயது சிறுமியின் வீட்டில் வளர்ந்த கூவி என்ற வளர்ப்பு நாய் ஒன்று கெமெட் பாலம் அருகே சுற்றி வந்துள்ளது.

அதை கவந்தித்துக்கொண்டிருந்த மீட்ப்பு படையினர் நாயின் அருகே சென்று பார்த்தபோது, தனுஷ்காவின் உடல் அங்கிருந்த மரக்கட்டையின் நடுவே சிக்கிக்கொண்டிருந்தை பார்த்தனர். அதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

எல்லைகளில் சுதந்திர தினம்... நெகிழவைக்கும் படங்கள்

சிறுமியின் உடலை தூக்கிக்கொண்டு வரும்போது, கூவி மெல்லிய குரலில்அழுததாகவும் சம்பவ இடத்தில் இருந்த இடுக்கி எம்பி டீன் குரியகோஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ்காவின் தந்தை பிரதீஷின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரின் உடல்கள் இன்னும் கண்டெடுக்கப்படாமல் உள்ளன.

அடுத்த செய்தி