ஆப்நகரம்

புல்வாமா வீரர்கள் குடும்பங்களுக்கு நிதியாகிய பிச்சை எடுக்கப்பட்ட பணம்

நந்தினி ஷர்மா என்ற மூதாட்டி கடந்த ஆக்ஸ்ட் மாதம் காலமானார். அவர் அஜ்மீரின் பஜ்ரங்கார் பகுதியில் உள்ள அம்பே மாதா கோவிலில் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை அவரது நாமினிக்கள் இருவரும் புல்வாமா வீரர்களில் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2019, 4:46 pm
நந்தினி ஷர்மா என்ற மூதாட்டி கடந்த ஆக்ஸ்ட் மாதம் காலமானார். அவர் அஜ்மீரின் பஜ்ரங்கார் பகுதியில் உள்ள அம்பே மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். ஒரு நாளின் முடிவில் கிடைக்கும் தொகையை வங்கியில் உள்ள அவரது கணக்கில் டெபாஸிட் செய்துவந்தார். இவ்வாறு சேர்த்த தொகை கிட்டத்தட்ட ரூ. 6.30 லட்சம் சேர்ந்தது. தன் மறைவுக்குப் பின்னர் இந்தத் தொகையைப் பாதுகாக்க இருவரை நாமினியாக நியமித்தார்.
Samayam Tamil fsddd


இந்த தொகை ஏதாவது நல்ல காரியத்துக்குப் பயன்பட வேண்டும் என அவர் நினைத்தார். அவரது விருப்பப்படி இதனை நல்ல காரியம் ஒன்றிற்கு பயன்படுத்த இரு நாமினி நபர்களும் முடிவெடுத்தனர். அப்போது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் குடும்பங்களுக்கு இழப்பு நிதியாக இதனைக்கொடுக்க இருவரும் முடிவுசெய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விஷயத்தைத் தெரிவித்தனர். தாங்கள் இப்பணத்தை முதவர் நிவாரண நிதி கணக்கில் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்ட அதிகாரிகள் அதற்கான ஆவணங்களில் அவர்களைக் கையெழுத்திட சொன்னார்கள். அவர்கள் அளித்த தொகையை ஆட்சியர் விஷ்வா மோஹன் ஷர்மா பெற்றுக்கொண்டார். இச்சம்பவம் அங்கு வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி