ஆப்நகரம்

தவறாகத் தொட முயன்ற நடத்துனரால் மாணவிக்கு நேர்ந்த அவலம்

திஷா என்ற 19 வயது கல்லூரி மாணவி கொல்கத்தாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். அங்கு ஓர் தனியார் பேருந்தில் திஷா அவரது தோழிகளோடு ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு ஃபுட்போர்டில் நின்று கொண்டுருந்தனர் திஷாவும் அவரது தோழிகளும்.

Samayam Tamil 23 Feb 2019, 12:42 pm
திஷா என்ற 19 வயது கல்லூரி மாணவி கொல்கத்தாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். அங்கு ஓர் தனியார் பேருந்தில் திஷா அவரது தோழிகளோடு ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு ஃபுட்போர்டில் நின்று கொண்டுருந்தனர் திஷாவும் அவரது தோழிகளும்.
Samayam Tamil disha


இந்நிலையில் பேருந்து நடத்துனர் மாணவிகளை உள்ளே செல்லும்படி கூறி, அவர்களை உள்ளே செல்ல வலியுறுத்தும் சாக்கில் தவறான இடங்களில் கைவைத்து அழுத்தினார். இதனால் பொங்கி எழுந்த திஷா, அவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் திஷாவை பேருந்தில் இருந்த தள்ளி விட்டார். இதில் அவரது கண்ணாடி உடைந்து அதன் சில் ஒன்று அவர் முகத்தை கிழித்தது. விழுந்த வேகத்தில் பேருந்து தன்மீது ஏறிவிடாமல் இருக்க திஷா உருண்டார். அவர் உயிர்பிழைத்தாலும் அவரது பாதம்மீது பேருந்து டயர் ஏறியது. இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

திஷாவைத் தள்ளிவிட்டு பேருந்து நிற்காமல் செல்வதைக் கண்டு அதிர்ந்த அவரது தோழி பேருந்தை நிறுத்த வலியுறுத்தினார். அப்போதும் பேருந்து நிறுத்தப்படாததால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்தார். திஷாவின் மற்றொரு தோழி அடுத்த ஸ்டாப்பில் இறங்கி திஷாவை நோக்கி ஓடி வந்தார். திஷா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நடத்துனர் போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

அடுத்த செய்தி