ஆப்நகரம்

சரக்கை ராவாக அடித்து நிரந்தரமா மட்டையான வாலிபர்!!

மது குடிக்கும் போட்டியில் பங்கேற்றவர்கள் ரத்த வாந்தி எடுத்து இறந்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2020, 6:12 pm
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட உகான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங். 55 வயதான இவர் சில தினங்களுக்கு முன், இஸட்நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்துவது தொடர்பாக இருவருக்குமிடையே பந்தயம் நடைபெற்றது.
Samayam Tamil சரக்கை ராவாக அடித்து நிரந்தரமா மட்டையான வாலிபர்


அதாவது பந்தயம் என்னவென்றால், 20 நிமிடத்திற்குள் யார் 4 குவாட்டர் பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் ஜெயித்தவர். இந்தப் பந்தயத்தில் தோற்பவர், இரண்டு பேருக்கான 8 குவார்டர் மதுபாட்டிலுக்கான விலையை கொடுக்க வேண்டும்.

போலீசாக வேண்டும் என நினைத்த விவசாயி மகள்..! கடைசியில் மைதானத்தில் நேர்ந்த சோகம்...

இதுதான் பந்தய நிபந்தனை. ராஜேந்திர சிங்கின் மகன் உள்ளிட்ட 9 பேர் முன்னிலையில் போட்டி நடைபெற்றது.

போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே, ராஜேந்திர சிங் நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீர் கலக்காமல் ராவாக குடித்து முடித்து பந்தயத்தில் வெற்றி பெற்றார். வெற்றிப் பெற்ற உற்சாகத்துடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த அவர், ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன், தன் தந்தையை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வரும் முன்பே ராஜேந்திர சிங் இறந்துவிட்டார்.

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பஸ்: 20 பேர் பலி?

இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து பரேலி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி