ஆப்நகரம்

சரண்டர் ஆன நக்சல் பயங்கரவாதிக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கிய மத்திய காவல் படை

ஜார்கண்டில் மத்திய காவல்படையில் சரண்டர் ஆன நக்சல் பயங்கரவாதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Samayam Tamil 7 Jun 2018, 4:27 pm
ஜார்கண்டில் மத்திய காவல்படையில் சரண்டர் ஆன நக்சல் பயங்கரவாதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Samayam Tamil naxal surrender



மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், பயங்கராவாதம் மற்றும் கருப்புப்பணம் ஒழிப்புக்காக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் பயங்கராவதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் உலகளவில் ஆச்சரியப்பட வைத்தது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் ஒருவர் சரண்டர் ஆனதையடுத்து, அவருக்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் லாத்தேஹார் மாவட்டத்ததில் நேற்று முன்தினம் சங்கர் என்ற நக்சலைட்டு இயக்கத்தைச் சேர்ந்தவர் மத்திய காவல்படையிடம் சரணடைந்தார். இதையடுத்து, அவரை முதலில் கைது செய்த போலீசார், பின்னர், நக்சல் குறித்த விபரங்களை விசாரித்தனர்.

இதையடுத்து, தான் திருந்திவிட்டதாகவும் இனிமேல் பயங்கராவாத எண்ணத்தை நினைக்கமாட்டேன் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில், இன்று மத்திய காவல்படை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சங்கரின் நல்லொழுக்கத்தைப் ஊக்குவித்து பாராட்டி கெளரவித்த மத்திய காவல்படை, அவருக்கு ஊக்கத்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார். இந்த பரிசுத்தொகையை சங்கருக்கு பாரத ஸ்டெட் வங்கியின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி