ஆப்நகரம்

பிளாஸ்டிக் கவருக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை: எறும்பு கடியால் அலறிய பரிதாபம்!

பெண் குழந்தை என்ற காரணத்தால், பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குப்பையில் வீசிய பெற்றோரை போலீசார் தேடிவருகின்றனர். எறும்புகள் கடிக்க ஆபத்தான நிலையில் அந்த குழந்தையை அருகில் இருந்த டீக்கடை வியாபாரி மீட்டார்.

TNN & Agencies 17 Oct 2017, 2:02 pm
போபால்: பெண் குழந்தை என்ற காரணத்தால், பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குப்பையில் வீசிய பெற்றோரை போலீசார் தேடிவருகின்றனர். எறும்புகள் கடிக்க ஆபத்தான நிலையில் அந்த குழந்தையை அருகில் இருந்த டீக்கடை வியாபாரி மீட்டார்.
Samayam Tamil a newborn baby girl has been rescued from a bin where she was found dumped in a plastic bag covered in ants
பிளாஸ்டிக் கவருக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை: எறும்பு கடியால் அலறிய பரிதாபம்!


மத்தியபிரதேச மாநிலம் போபாலில், பெண் குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ரோட்டோரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அருகில் டீக்கடை நடத்தும் தீரெஜ் ரத்தோர் என்பவர் அதன் அருகில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது பிளாஸ்டிக் பையில் தலை மூடப்பட்டு பெண் குழந்தை எறும்புகள் மொய்த்த நிலையில் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரத்தோர் தனது நண்பர்களின் துணையுடன் எறும்புகளை சுத்தம் செய்தார்.

பின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அந்த குழந்தையை தூக்கி சென்று அனுமதித்தார். அங்கு அந்த குழந்தையின் எறும்புக்கடி காயத்துக்கு மருந்து போடப்பட்டு முதலிதவி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையின் பெற்றோரை தேடி வருகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்ற நிலை நிலவுதாகவும், வரதட்சணைக்கு பயந்து பெற்றோர்கள் பெண் குழந்தைகளை அதிகமாக வெறுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

A newborn baby girl has been rescued from a bin where she was found dumped in a plastic bag, covered in ants.

அடுத்த செய்தி