ஆப்நகரம்

'அவ்வளோ பயம் ஆஸ்பத்திரிக்கு'! கொரோனா பீதியால் நோயாளிக்கு திறந்த வெளியில் சிகிச்சை

உடல்நலம் பாதித்த கேரள இளைஞரை கொரோனா பீதியால் அரசு ஆஸ்பத்திரியில் பல மணி நேரமாக திறந்த வெளியில் இருட்டில் படுக்க வைத்து சிகிச்சையளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 7:25 pm
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சந்தனம்தோப்பு, சினிபவன் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் உதயகுமார் (49). அவர் கேரளாவில் இருந்து கடற்கரை வழியாக கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதிக்கு வந்துள்ளார்.
Samayam Tamil கொரோனா பீதியால் நோயாளிக்கு திறந்த வெளியில் சிகிச்சை


இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். மயக்கத்தில் இருந்த வாலிபரைக் கண்ட அந்த பகுதியில் உள்ள சிலர் ஆட்டோவில் ஏற்றி அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் வந்த உதயக்குமாரை மருத்துவ பணியாளர்கள் கொரோனா பீதியால் பரிசோதனை செய்து ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் ஆஸ்பத்திரியின் முன்பக்கத்தில் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஓரு பெஞ்சில் படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

ஓகே... கோயில்களை திறந்துக்குங்க: முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

மேலும், அந்த இளைஞரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பலமணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

இதனால் பல மணி நேர காத்திருப்புக்குப்பின் அந்த வாலிபரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பித்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உடல்நலம் பாதித்த கேரள இளைஞருக்கு கொரோனா இருப்பதாக நினைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு வெளியே இருளில் திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி