ஆப்நகரம்

அடேங்கப்பா..! உச்சகட்ட அபராதத்தை கட்டிய நபர்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!

ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததால் இதுவரைக்கும் எந்த வாகன ஓட்டிகளிடமும் வசூலிக்கப்படாத அபராதத்தை போலீசார் அந்த நபரிடமிருந்து பெற்றுள்ளனர்.

Samayam Tamil 9 Sep 2019, 1:56 pm
சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை பலமடங்கு உயர்த்தி மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் செப்டம்பர் 1 முதல் அமலாகியது. அன்று முதல் இன்று வரை இது குறித்த செய்திகள் வந்த வன்னம் உள்ளன.
Samayam Tamil 11


ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநர் கட்டிய அபராதம் வாகன ஓட்டிகளை தலை சுற்ற வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அசோக் ஜாதவ் 86 ஆயிரத்து 500 ருபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இந்த அபராத தொகையே நாட்டின் அதிகபட்ச அபராதமாகும்.

முத்தம் பெற மறுத்த பள்ளி மாணவி கொலை..!

அசோக் ஜாதவ் லாரியில் அதிக அளவு சுமையுடன் வந்ததாகவும், தனக்கு பதிலாக கிளீனரை வண்டியை இயக்க செய்ததாகவும், அவருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்பதற்காகவும் தலா இரண்டு குற்றங்களுக்காக 5 ஆயிரமும், பெருமளவு சுமையை ஏற்றி வந்ததற்கு அதிகபட்சமாக 56 ஆயிரம் ரூபாயையும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து சில குற்றங்களுக்கு மேலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்திய பின்னரே போலீசார் அசோக் ஜாதவை விடுவித்துள்ளனர். ஆனாலும் அபராத தொகையாக அசோக் ஜாதவ் 70 ஆயிரம் கட்டியுள்ளார்.

3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீசிய கொடூரன்.!

இந்த தகவலை தெரிவித்த சம்பல்பூர் போக்குவரத்து அதிகாரி கூறுகையில், போக்குவரத்து விதிகளை மீறியதால் தகுந்த காரணங்களின் அடிப்படையிலேயே அபராதம் வசூலிக்கப்பட்டது. அசோக் ஜாதவ் போலீசாரிடம் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அபராதத்தை கட்டிய பின்னரே அவரை விடுத்தோம் என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி