பட்டேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் ஹர்த்திக் பட்டேலை திமுக-வை சேர்ந்த ஆ. ராசா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
குஜராத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தவர் இளம் அரசியல் தலைவர் ஹர்த்திக் பட்டேல். இவர் பட்டேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரியும் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த 14 நாட்களாக உண்ணாநிலை போராட்டம் செய்து வரும் ஹர்த்திக் பட்டேல், உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இவரை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளரான ஆ. ராசா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் சாசனம் மூலமாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் ஆ.ராசா கோரிக்கை விடுத்தார்.
குஜராத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தவர் இளம் அரசியல் தலைவர் ஹர்த்திக் பட்டேல். இவர் பட்டேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரியும் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த 14 நாட்களாக உண்ணாநிலை போராட்டம் செய்து வரும் ஹர்த்திக் பட்டேல், உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இவரை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளரான ஆ. ராசா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் சாசனம் மூலமாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் ஆ.ராசா கோரிக்கை விடுத்தார்.