ஆப்நகரம்

யோகியை எதிர்த்த ராப் பாடகிமீது வழக்குப்பதிவு

பாப் இசை மன்னன் என அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்ஸன் முதல் நம்மூர் தமிழ் ராப் பாடகர்கள்வரை பலர் தங்கள் ராப் இசை மூலம் சமூக அநீதிகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். தற்போது இந்திய ராப் இசைப் பாடகி ஒருவரது நேரடி அரசியல் விமர்சனத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2019, 5:42 pm
பொதுவாக ராப் இசைக் கலைஞர்கள் தங்களது பாடல்களில் சமூக கருத்துகளை நேரடியாகவோ அல்லது இலை மறை காயாகவோ பதிவு செய்வது வழக்கம். பெரியார், அம்பேத்கர், சே குவேரா, மண்டேலா, லீ குவான் யூ உள்ளிட்ட புரட்சியாளர்கள் அவரது கருத்துகள் குறித்தும் சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்கும் வகையிலும் ஒடுக்கப்பட்ட இன மக்களின் குரலாகவும் உலகம் முழுக்க ஒலிக்கும் இசை ராப் இசை ஆகும்.
Samayam Tamil 1560851146_hard-kaur-slams-mohan-bhagwat-yogi-adityanath


பாப் இசை மன்னன் என அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்ஸன் முதல் நம்மூர் தமிழ் ராப் பாடகர்கள்வரை பலர் தங்கள் ராப் இசை மூலம் சமூக அநீதிகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இதனால் இந்த இசை கலைஞர்களுக்கு அவ்வப்போது அரசியல் தலைவர்களால் பிரச்னைகளும் வந்ததுண்டு. ஒரு நாட்டின் ஆளும் கட்சியையோ அதன் கொள்கையையோ எதிர்த்து, அதீத ரசிகர் பட்டாளம் கொண்ட ராப் பாடகர் ஒருவர், இசைக் கச்சேரி அரங்கேற்றினால் அவருக்கு பல மூலைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்புவது சகஜம்.

தற்போது இந்திய ராப் இசைப் பாடகி ஒருவரது நேரடி அரசியல் விமர்சனத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

யூகே நாட்டைச் சேர்ந்த பெண் ரேப்பர் தரன் கவுர் தில்லொன். உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பகவத் ஆகியோர் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

வாரணாசி சாஷங்க் சேகர் என்ற வழக்கறிஞர் தரன்மீது இபீகோ 124A, 153A(இரு குழுக்களுக்கு இடையே வன்முறையை தூண்டுதல்), 505, 500, 66 ஆகிய 5 பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹேமந்த் கார்கரே கொலை வழக்கு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் தரன் கடுமையாக விமர்சித்து இருந்தார். முன்னதாக ஹேமந்த் காகரேவை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொலை செய்ததாக புகார் எழுந்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ’வன்புணர்வு செய்யும் நபர்’ என விமர்சித்தார்.

26/11 மும்பை தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது என குற்றஞ்சாட்டினார்.

இதனால் ஆத்திரமுற்ற வழக்கறிஞர் சேகர் இந்த புகாரை அளித்துள்ளார். புலன் விசாரணை சர்வைலைன்ஸ் செல்லுக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு தற்போது விசாரணை வந்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இணையத்தில் பதிவிட்டதற்காக பாடகி தரன்மீது தக்க நடவடிக்கை எடுக்க சேகர் வலியுறுத்தி உள்ளார்.

தரன், சில பாலிவுட் படங்களில் ராப் பாடல்களை இசையமைத்து பாடியுள்ளார். சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மத்தியில் இவர் பிரபலமான இசைக் கலைஞராகத் திகழ்கிறார். ராப் இசைக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள தரன், சமூக கருத்துகளை அவ்வப்போது இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி