ஆப்நகரம்

காதலியை சந்திக்க சென்ற இளைஞர் படுகொலை.!

ஒடிசாவை சேர்ந்தவர் இளைஞர், தனது காதலியை சந்திக்க பெங்களூர் சென்றபோது மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Oct 2017, 5:57 pm
ஒடிசாவை சேர்ந்தவர் பிரனாய் மிஸ்ரா (28). பிடெக் படித்த இவர் 2014ல் பெங்களூர் வந்தார். கடைசியாக அவர் அக்சஞ்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
Samayam Tamil a soft engineer pranay mishra murdered in bangalore
காதலியை சந்திக்க சென்ற இளைஞர் படுகொலை.!


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பேகூரிலுள்ள நண்பர் வீட்டிற்கு சென்ற பிரனாய், அதிகாலை 2.30 மணியளவில் தனது காதலியை சந்திப்பதற்காக, தாவரகெரே பகுதிக்கு சென்றுள்ளார். இதன்பிறகு தனது பைக்கில் தாவரகெரே ரோட்டிலுள்ள சாக்லேட் பேக்டரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் சரமாரியாக பிரனாய் மிஸ்ராவை கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து முடிந்த அளவுக்கு பிரனாய் தப்பியோடியுள்ளார். ஆனால் அவர் சரிந்து விழும்வரை தொடர்ந்து அந்த நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.



பிரனாய் மிஸ்ரா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் அவரை அருகேயுள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆண், பெண் ஐடி ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Soft engineer pranay mishra murdered in bangalore

அடுத்த செய்தி