இந்திய உளவாளி என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை அளித்திருக்கும் சூழலில், பாகிஸ்தான் உளவாளி ஒருவரை போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர்.
இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்புஷன் ஜாதவ் என்ற இந்தியருக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சஜீத் முனீர் என்ற பாகிஸ்தான் நபரை, சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் கடந்த ஒரு ஆண்டாக போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர்.
12 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததும் சஜீத் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து, அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இது குறித்த எந்த முடிவையும் பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக போபால் காவல்துறையினரின் பராமரிப்பில் சஜீத் முனீர் வாழ்ந்து வருகிறார். இவருக்கான உணவு மற்றும் இதர செலவுகளை போபால் டி.எஸ்.பி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சஜித் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து போபால் காவல்துறையினர் மனு அனுப்பி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அரசு தற்போது வரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.
பாகிஸ்தானில் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த சஜீத்தை, ஐ.எஸ் உளவு அமைப்பு இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்திக் கொண்டது. சஜீத் இந்த காரியத்தை முடித்துக் கொடுத்தால், கொலை வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு சஜீத்திற்கு உறுதி அளித்திருக்கிறது. இதை நம்பி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊருடுவிய சஜித், போபாலில் உள்ள ராணுவத் தளத்தை உளவு பார்த்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 12 ஆண்டுகால சிறை வாசத்திற்கு பிறகு கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி சஜீத் விடுதலை செய்யப்பட்டார்.
A study in contrast: Here's how India treats a Pakistani spy
இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்புஷன் ஜாதவ் என்ற இந்தியருக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சஜீத் முனீர் என்ற பாகிஸ்தான் நபரை, சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் கடந்த ஒரு ஆண்டாக போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர்.
12 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததும் சஜீத் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து, அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இது குறித்த எந்த முடிவையும் பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக போபால் காவல்துறையினரின் பராமரிப்பில் சஜீத் முனீர் வாழ்ந்து வருகிறார். இவருக்கான உணவு மற்றும் இதர செலவுகளை போபால் டி.எஸ்.பி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சஜித் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து போபால் காவல்துறையினர் மனு அனுப்பி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அரசு தற்போது வரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.
பாகிஸ்தானில் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த சஜீத்தை, ஐ.எஸ் உளவு அமைப்பு இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்திக் கொண்டது. சஜீத் இந்த காரியத்தை முடித்துக் கொடுத்தால், கொலை வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு சஜீத்திற்கு உறுதி அளித்திருக்கிறது. இதை நம்பி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊருடுவிய சஜித், போபாலில் உள்ள ராணுவத் தளத்தை உளவு பார்த்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 12 ஆண்டுகால சிறை வாசத்திற்கு பிறகு கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி சஜீத் விடுதலை செய்யப்பட்டார்.
A study in contrast: Here's how India treats a Pakistani spy