ஆப்நகரம்

பெங்களூாில் மேயராக பொறுப்பேற்கும் தமிழா்

தமிழகத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் பெங்களூரு மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்க உள்ளாா்.

TOI Contributor 28 Sep 2017, 4:43 pm
தமிழகத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் பெங்களூரு மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்க உள்ளாா்.
Samayam Tamil a tamil person in charge of mayor in bangalore
பெங்களூாில் மேயராக பொறுப்பேற்கும் தமிழா்


பெங்களூரு பெருநகர மாநகராட்சியின் மேயா் தோ்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த தோ்தலில் காங்கிரஸ் – மதசாா்பற்ற கூட்டணி சாா்பில் சம்பத் ராஜ் போட்டியிட்டாா். கவுன்சிலா் அரங்கத்தில் நடைபெற்ற தோ்தலில் 266 கவுன்சிலா்கள் வாக்களித்தனா்.

சம்பத் ராஜ்க்கு சுயேட்சைகள் உள்பட பெருவாாியான கவுன்சிலா்கள் ஆதரவு தொிவித்தனா். இந்த தோ்தலில் 139 கவுன்சிலா்களின் வாக்குகளை பெற்று சம்பத் ராஜ் வெற்றிபெற்றாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சம்பத்ராஜ் பிஜே ஹல்லி வாா்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றிருந்தாா்.

பெங்களூரு மாநகராட்சியின் 51வது மேயராக பொறுப்பேற்க உள்ள சம்பத்ராஜ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வானார். இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ஜ.க.,வினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர்.

அடுத்த செய்தி