ஆப்நகரம்

புளூ வேல் தற்கொலை கேம்: இந்தியாவை அட்டாக் பண்ணும் வாய்ப்பு அதிகம்?

புளூ வேல் தற்கொலை விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் இதுவரை 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

TNN 13 Aug 2017, 4:51 pm
புளூ வேல் தற்கொலை விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் இதுவரை 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil a teen dead 2 rescued in last 24 hours blue whale danger
புளூ வேல் தற்கொலை கேம்: இந்தியாவை அட்டாக் பண்ணும் வாய்ப்பு அதிகம்?


ரஷ்யாவை தாக்கிய இந்த புளூ வேல் (Blue whale) தற்கொலை விளையாட்டு தற்கொலை இந்தியாவை குறி வைத்துள்ளது. இதன் காரணமாக இந்த விளையாட்டால் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கட்டளைகள் அனுப்பி உங்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டும் ஆபத்தான விளையாட்டு. இந்த விளையாட்டில் இணைந்தவர்கள் இந்த விளையாட்டில் பொறுப்பாளர்கள் கொடுக்கும் கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.

அதாவது, நம்மை நாமே பிளேடால் கிழிப்பது, ஊசியால் குத்திக்கொள்வது போன்ற கட்டளைகள் இந்த புளூ வேல் பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று கட்டளை கொடுக்கப்பட்டு இறுதியில் 50வது நாளில் உங்களை தற்கொலை செய்து கொள்ளும்படியும் கட்டளை வரும். இந்த விபரீத விளையாட்டின் காரணமாக இந்தியாவில் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த மாதம் மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் செய்து கொண்டான். இதே போல், மத்தியபிரதேசத்தில் சாமிலா தேவி பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளான்.

ரஷ்யாவைச் சேர்ந்த பிலிஃப் புடெக்கின் (22) என்ற உளவியல் மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவனை ரஷ்யா போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது ரஷ்யா. இந்த கட்டளைகள் தொடர்பாக வெளியாகும் தகவல்களை கண்டுபிடிக்க சமூக வலைதளங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி