ஆப்நகரம்

45 நிமிடங்கள் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்கள்: பரபரப்பு வீடியோ!!

ஜம்மு - காஷ்மீரில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறின. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 7:37 pm
ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்துக்குட்ட மன்தால் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று காஷ்மீர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது..
Samayam Tamil lpg


அத்துடன் வெடி வெடித்ததைப் போன்று 45 நிமிடங்களுக்கு பலத்த சப்தத்துடன் அனைத்து சிலிண்டர்களும் வெடி சிதறின. அப்போது கொழுந்துவிட்டு எரிிந்த தீயை கண்டு அப்பகுதிவாசிகளும், அருகில் உள்ள கிராம மக்களும் அச்சமடைந்தனர். இந்த விபத்தையடுத்து, அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்; மீண்டும் ஒரு புல்வாமா? பதறவைத்த 40 கிலோ வெடிபொருள்!

இருப்பினும், இந்த விபத்து தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா, உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புல்வாமா பகுதியில் 40 கிலோ வெடிப்பொருட்களுடன் பயணித்த காரை, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வெடிக்க செய்த பரபரப்பு சம்பவம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று, எரிவாயு சிலிண்டர் லாரியில பலத்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி