ஆப்நகரம்

ஆபத்தை உணராமல் பின் தொடர்ந்த கார், ஆந்திர வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்...

ஆந்திர மாநிலம் அருகே வெள்ள நீரை கடக்க முயன்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி...

Samayam Tamil 30 Jul 2020, 7:47 pm
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து ராகேஷ், யூசப் என்ற 2 வாலிபர்கள் மாருதி கார் ஒன்றில் கர்நாடகாவை நோக்கி கடந்த வியாழக்கிழமை அன்று சென்று கொண்டிருந்தனர். அப்போது பிஜாப்பூர் அருகே இருந்த பாலத்தில் வெள்ள நீர் ஓடிக்கொண்டிருந்ததால் பாலத்துக்கு முன்பாக காரை நிறுத்தியுள்ளனர்.
Samayam Tamil andhra flood video


இந்நிலையில், அவர்களுக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆர்.டி.சி பேருந்து சிறிது நேரம் நின்று பின்னர் மெதுவாக பாலத்தை கடந்து சென்றது. அப்பேருந்தை பின்தொடர்ந்து வந்த அந்த காரும் நீரோட்டத்தை கடந்து செல்ல முயன்றபோது, நீரின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்தவர்கள் அலற தொடங்கினர். இந்நிலையில், கார் மிதந்து கொண்டே சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் சென்று தலைகுப்புற கவிழ்ந்தது.

தாம்பத்தியத்துக்கு மறுத்து வந்த கணவன், காரணம் கேட்டு அதிர்ந்த மனைவி..!

ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த இடம் ஆழமற்றதாக இருந்ததால் கார் முழுவதுமாக நீரில் மூழ்கவில்லை, காரிலிருந்த இருவரும் உள்ளூர் வாசிகள் உதவியுடன் வாகனத்திலிருந்து வெளியேற முடிந்தது. அண்மையில் பெய்த மழையால் மழையின் காரணமாக அப்பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி