ஆப்நகரம்

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டிப்பு

மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

TNN 28 Mar 2017, 10:35 am
மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டிப்புடன் கூறியுள்ளது.
Samayam Tamil aadhaar cant be made compulsory for welfare schemes benefits supreme court
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டிப்பு


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெறுவது தொடங்கி, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், ஆதார் எண் கட்டாயம் எனக் கூறப்படுகிறது. அண்மையில், பள்ளி செல்லும் சிறார்கள் மதிய சத்துணவு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால், கடும் கண்டனம் பலதரப்பிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் மீண்டும் தனது கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளது. அதில், மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

காரணம், அரசின் நலத்திட்டங்களைப் பெற உதவும் புகைப்பட ஆவணங்களில், ஆதார் அட்டையும் ஒன்று என்றுதான் கருத வேண்டும். அதனை தனிச்சிறப்பு ஆவணமாகக் கருதக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், எஸ்.கே.கவுல், சந்த்ராசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது எளிய மக்களை பாதிக்கக்கூடிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஆதார் எண்ணை கட்டாயமாக்கி, சாமானிய மக்களை பாதிக்கும் செயல்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Aadhaar biometric identification cannot be made compulsory to offer benefits under the government's social welfare programmes, the Supreme Court clarified on Monday.

அடுத்த செய்தி