ஆப்நகரம்

பிப்., 6ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்பு கட்டாயம்: மத்திய அரசு திட்டவட்டம்

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 3 Nov 2017, 12:20 pm
டெல்லி: ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil aadhaar mobile number linking must by february 6 says centre
பிப்., 6ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்பு கட்டாயம்: மத்திய அரசு திட்டவட்டம்


ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு நான்கு வாரங்களில் ஆதார் இணைப்பின் கட்டாயம் குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் கடந்த பிப்ரவரி 6, 2017 அன்று உத்தரவிட்டது. அதற்காக ஒரு ஆண்டு அவகாசம் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு தயாராக இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி