ஆப்நகரம்

உதவி எண்ணை வைத்து யாரும் ஆதார் தகவல்களை திருடமுடியாது: யுஐடிஏஐ உறுதி

ஆதார் உதவி எண்கள் மூலம் தனிநபர் குறித்த விவரங்களை யாரும் திருட முடியாது என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இதற்கான பல்வேறு விளக்கங்களை தனது ட்விட்டர் பதிவில் யுஅடிடிஏஐ குறிப்பிட்டுள்ளது.

Samayam Tamil 5 Aug 2018, 10:09 pm
ஆதார் உதவி எண்கள் மூலம் தனிநபர் குறித்த விவரங்களை யாரும் திருட முடியாது என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இதற்கான பல்வேறு விளக்கங்களை தனது ட்விட்டர் பதிவில் யுஅடிடிஏஐ குறிப்பிட்டுள்ளது.
Samayam Tamil aadhar
ஆதார் தகவல்கள் பாதுகாப்பு பற்றி யுஐடிஏஐ புதிய விளக்கம்


ஆதாரின் பாதுகாப்பு குறித்து அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரபரப்பட்டுள்ளன. அதார் தொடர்பான தகவல்கள் அனைத்தும் மிக பாதுகாப்பாக உள்ளன என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இது தொடர்பான உறுதியற்ற தகவல்களை வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்வதை மக்கள் நிறுத்த வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.



ஆன்ட்ராய்டு கைபேசிகளில் பதியப்பட்டுள்ள ஆதார் தொடர்பு எண்களை அழித்து விட்டு, அதற்காக வழங்கப்பட்டுள்ள புதிய எண்களை மக்கள் வைத்துக்கொள்ளலாம் எனவும் ஆதார் ஆணையம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை ‘சேவ்’ செய்ததற்கு கூகுள் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது.



ஆதார் ஆணையம் அனுமதி பெறாமல் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் தனது உதவி எண்ணை ‘சேவ்’ செய்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த ஆதார் ஆணையம், “எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையோ மொபைல் தயாரிப்பு நிறுவனத்தையோ ஆதார் எண்ணை அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களில் புகுத்துமாறு கேட்கவில்லை.” என்று தெரிவித்தது.



இந்நிலையில், கூகுள் நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “2014ஆம் ஆண்டு இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில், 112 என்ற உதவி எண்ணைச் சேர்க்கும் போது ‘கவனக்குறைவாக’, ஆதார் உதவி எண்ணையும் சேர்த்துவிட்டோம்” என்று கூறியிருந்தது.

அடுத்த செய்தி