ஆப்நகரம்

இனி எல்லாவற்றிற்கும் ஆதார் எண் கட்டாயம்: தீவிரம் காட்டும் மத்திய அரசு

அனைத்துவிதமான வங்கி பணப்பரிவர்த்தனைக்கும் இனி ஆதார் எண்களை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

TNN 2 Dec 2016, 2:50 pm
டெல்லி: அனைத்துவிதமான வங்கி பணப்பரிவர்த்தனைக்கும் இனி ஆதார் எண்களை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil aadhar card is going to compulsory in bank transacation says central govt
இனி எல்லாவற்றிற்கும் ஆதார் எண் கட்டாயம்: தீவிரம் காட்டும் மத்திய அரசு


வங்கிகளில் போடப்படும் பணத்தை பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் மூலம் மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இவற்றை பின் நம்பர் அல்லது பாஸ்வேர்டு மூலம் செயல்படுத்துகின்றனர்.

இந்த சேவைகளுக்கு ஆதார் எண் சம்பந்தப்பட்ட பயோமெட்ரிக் முறையிலான கைரேகையை பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பொதுவான மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. தற்போது ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை ரூ.1.13 கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதனை நாள் ஒன்றுக்கு ரூ.40 கோடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Aadhar Card is going to compulsory in bank transacation says Central Govt. So they plan to create common Mobile application soon.

அடுத்த செய்தி