ஆப்நகரம்

பேய் பங்களாவாக மாறிய ஆம் ஆத்மி அலுவலகம்.. மாயமான தொண்டர்கள்!

தேர்தல் முடிவு நாளில் ஆள் நடமாட்டமின்றி காணப்படும் ஆம் ஆத்மி அலுவலகம்.

Samayam Tamil 10 Mar 2022, 9:55 am
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சூழல் நிலவுகிறது.
Samayam Tamil Aam Aadmi


உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக முன்னிலையில் உள்ளது. எனினும் சமாஜ்வாதியும் சில இடங்களில் கடும் போட்டி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி உத்தரப் பிரதேசத்தில் வலுவிழந்து காணப்படுகிறது. ஆனால் பஞ்சாபில் பலமாக உள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகம் ஆள் அடையாளமின்றி அமைதியாக பேய் பங்களா போல் காணப்படுகிறது. மற்ற கட்சிகள் கொண்டாட்ட மனநிலையில் உள்ள சூழலில் ஆம் ஆத்மி அமைதியாக உள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தல்.. பாஜக முன்னிலை.. மீண்டும் யோகி ஆட்சி?
எனினும், பஞ்சாபில் கொண்டாட்டங்களுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது. வெற்றியை கொண்டாடுவதற்காக ஏராளமான இனிப்புகளுக்கு ஆம் ஆத்மி ஆர்டர் கொடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி இரண்டு கட்சிகளுமே கொண்டாட்ட மனநிலையில் உள்ளன. சமாஜ்வாதி தொண்டர்கள் நேற்றில் இருந்தே இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றன. சமாஜ்வாதி தலைமை அலுவலகம் சார்பில் 500 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி