ஆப்நகரம்

காற்று தூய்மைப்படுத்தி பொருத்துங்க; பள்ளிக்கூடம் சுத்தமாகும்: வழிகாட்டும் டெல்லி அரசு

பள்ளிக்கூடங்களில் காற்று தூய்மைப்படுத்திகள் பொருத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 30 Apr 2017, 4:34 pm
டெல்லி: பள்ளிக்கூடங்களில் காற்று தூய்மைப்படுத்திகள் பொருத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil aap govt asks schools to install air purifiers
காற்று தூய்மைப்படுத்தி பொருத்துங்க; பள்ளிக்கூடம் சுத்தமாகும்: வழிகாட்டும் டெல்லி அரசு


டெல்லியில் மாநில கல்வித்துறை இயக்குநர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் சுற்றுப்புறத் தூய்மை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் மக்கள் நலன் எவ்வாறு பாதிக்கப்படும் என்று விளக்குமாறு கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளில் காற்று தூய்மைப்படுத்திகளை பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் காற்றின் தரத்தை உயர்த்த மாணவர்களுக்கு உரிய கல்வியை புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பாடப்புத்தகங்களில் உள்ள கல்வி மட்டுமல்லாமல், மாற்று வழிக் கற்றல் மற்றும் களப்பணி ஆற்றுவது குறித்து ஊக்குவிக்க வலியுறுத்தியுள்ளது. பண்டிகை காலங்களில் எவ்வாறு சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் கொண்டாடுவது குறித்து அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Concerned over the quality of air in the national capital, the Aam Aadmi Party government has directed city schools to install air purifiers so as to ensure students dont face health hazards due to air pollution.

அடுத்த செய்தி