ஆப்நகரம்

ஆம் ஆத்மியில் போர்க்கொடி உயர்த்திய குமார் விஸ்வாஸ்க்கு புதிய பதவி- அமானுதுல்லா கான் நீக்கம்!

ஆம் ஆத்மி கட்சியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்களில், அமானுதுல்லா கான் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம், குமார் விஸ்வாஸ் கட்சியில் நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

TNN 4 May 2017, 10:09 am
ஆம் ஆத்மி கட்சியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்களில், அமானுதுல்லா கான் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம், குமார் விஸ்வாஸ் கட்சியில் நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil aap keeps kumar vishwas suspends mla amanatullah khan
ஆம் ஆத்மியில் போர்க்கொடி உயர்த்திய குமார் விஸ்வாஸ்க்கு புதிய பதவி- அமானுதுல்லா கான் நீக்கம்!


சமீபத்தில் டெல்லி மாநகராட்சித் தேர்தலில், பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்றது. இதற்கு, வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ததே காரணம் என, ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவித்தது.

அதேசமயம், ஆம் ஆத்மி மீது எழுந்துள்ள பலவித ஊழல் குற்றச்சாட்டுகளே இத்தகைய தோல்விக்குக் காரணம் என்று, அக்கட்சியினரே கூற தொடங்கினர். குறிப்பாக, குமார் விஸ்வாஸ் போன்ற மூத்த தலைவர்கள் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள்.

ஊழல் மலிந்துவிட்டதால், கட்சியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை பாஜக.,வின் கைக்கூலி என மற்ற தலைவர்கள் விமர்சிக்கவே, கட்சியில் பெரும் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு, சில புதிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளனர். இதன்படி, போர்க்கொடி உயர்த்திய குமார் விஸ்வாஸ், கட்சியில் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், விஸ்வாஸ் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த அமானுதுல்லா கான், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வீண் குழப்பம் ஏற்படுத்த முயன்றதால், அமானுதுல்லா நீக்கப்படுவதாக, மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Aam Aadmi Party managed to pacify a vocal and defiant Kumar Vishwas on Wednesday by suspending Okhla MLA Amanatullah Khan, whose public attack on the former had precipitated the crisis, and appointing Vishwas in-charge of Rajasthan.

அடுத்த செய்தி