ஆப்நகரம்

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் பட்டினியால் தவிப்பு

டெல்லியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

TNN 26 Aug 2016, 7:14 pm
டெல்லியில் சமய்பூரில் உள்ள பாட்லியில் நேபாளி காலனியில் இரண்டு வருடமாக ஒரு வீட்டில் வாடகைக்கு பப்லு (35), தன்னுடைய மனைவி ரோஷி மற்றும் இரு குழந்தைகள் அல்கா (8), ஜோதி (3) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை விட்டுவிட்டு ரோஷி சென்றுவிட்டார். இதேபோல், எந்த வேலைக்கும் செல்லாத குடிகாரரான பப்லு தன்னுடை இரு குழந்தைகளையும் காற்றோட்டம் இல்லாத ஒரு இருட்டறையில் அடைத்துவிட்டு கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
Samayam Tamil abandoned by parents delhi sisters found maggot infected and starving
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் பட்டினியால் தவிப்பு


ஒரு வாரத்திற்கு பின்பு அந்த இருட்டறையில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அருகிலிருந்த பக்கத்து வீட்டினர் பூட்டியிருந்த அந்த வீட்டிற்குள் சென்று பட்டினியால் சாகக்கிடந்த அந்த குழந்தைகளை மீட்டு ரோகினியில் இருக்கும் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துமனையில் அனுமதித்தனர்.

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பட்டினியால் இருந்த இவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால், இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர்களின் நிலைமை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி